------------------------------------------------------
தையும் பிறந்தது
வழியும் திறந்தது
சபரிமலை யாத்திரை
------------------------------------------------
எல்லா "மிஸ் யூ"களும்
காதலை நோக்குவதாகவும்,
எல்லா "லவ் யூ"களும்
காமத்தைநோக்குவதாகவும்
மட்டுமே இருந்து விடுவதில்லை!
-----------------------------------------------------------------------------------------
காந்திஜி பிறந்த நாள்
கைதிகளுக்கு கருணை விடுதலை.
வெளியே வந்தவன் நொந்து கொண்டான்
இன்னைக்குப் போயி வெளியே வந்தேனே
எல்லாக் கடையும் அடைச்சிருக்கு!
-----------------------------------------------------------------------
சுதந்திர தினம்
கைதிகளுக்கு
வடை பாயாசத்தோடு சாப்பாடு!
அறவழியில் போராட்டம்
புறப்பட்டார் தலைவர்
பின்னாலேயே
பாதுகாப்புக்கு
துப்பாக்கியுடன் பூனைப்படை
------------------------------------------------------------
அகிம்சை
என்கெளன்ட்டர் முடித்து
வெற்றிகரமாக திரும்பி வந்தார் இன்ஸ்பெக்டர்.
இருக்கைக்குப் பின்புறம் காந்தி சிரித்துக் கொண்டு!
--------------------------------------------------
ஊருக்கே படியளந்த
விவசாயிக்கு
மதிய உணவு திட்டம்...
----------------------------------------------------------
மூன்று மணி நேரம் ஷகீலா படம்.
மிஞ்சிய முப்பது காசு சில்லறையில்
தெருக்கோயிலுக்குக் கற்பூரம்...
-------------------------------------------------------------
ஒரு குடம் பாலை
சிறுதுளியால் வென்றதால்
விஷமே பெரிது..?????
--------------------------------------------------------
புதுத்துணி வாங்கித்தரும்
அப்பா-அம்மா
உடுத்திக் கொள்கிறார்கள்
பாசத்தை
பண்டிகைக்கு பண்டிகை
மட்டும்!
-------------------------------------
ஆயிரம் முறை
கண்ணாடி பார்த்தேன்
நீ
ஒரு முறை பார்ப்பதற்காக!
----------------------------------------------
பூக்கள்
வாடாமல்
இருக்க
கண்ணீர்
தெளித்து
விற்கிறாள்
விதவை!
--------------------------------------
கண்ணே உன் கூந்தலுக்கு பூச்சூட
நான் உந்தன் குடும்பத்துக்கே
பூச்சூட வேண்டியிருக்கிறது.
அவர்கள் காதுகளில்!
-----------------------------------------------------
கண்ணே! கொஞ்சம் வெளியே வா!
வெண்ணிலாவைக் காணாமல்
எதிர்வீட்டுக் குழந்தை
உண்ண மறுக்கிறது!
----------------------------------------------
கருக்கலைப்பு
முகவரி தெரிந்தும்
முகம் தெரியவில்லை
விடை அறியுமுன்
வினா அழிக்கப்பட்டடது!
-------------------------------------------
கடவுள் சன்னதியிலும்
நிம்மதியில்லை
காவலில்லாமல் காலணிகள்!
-----------------------------------------
படிக்க விரும்பினேன்
தடுத்தார் அப்பா
காதல் பாடம்!
--------------------------------
கடைசியாக
எப்படியோ மனசு மாறி
காதலைச் சொல்கிறாள். . .
அவன் கல்லறையில்!
---------------------------------
நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
நாலந்தா பல்கழைக்கழகம்.
அரசியல்!
---------------------------------------------------------------------
உண்மையின் பக்கம் போவதை பலர்
விரும்புவதில்லை.
உண்மையை தன் பக்கம் வளைத்துக்
கொள்ளவே விரும்புகிறார்கள்..!
--------------------------------------------------------------
தோற்றுக்கொண்டேயிருப்பது தோல்வி அல்ல!
முயற்சியைக் கைவிடுவதே உண்மையான
தோல்வி..!
-----------------------------------------------------------------
மழைக்கு ஏங்கிக் கிடக்கும் ஊரிலும்
மழை பெய்தால்,
திட்டறதுக்கு இரண்டு பேர்
இருப்பான்..!
-------------------------------------------------------------------
அலைதல் இனிது,
திரிதல் இனிது
தேடல் இனிது,
தெளிதல் இனிது
தெளிந்த பின்னும்
தேடல் தொடர
வாழ்தல் இனிது..!
----------------------------------------------
பெண்ணுரிமை பேசும் ஆண்களை திருமணம்
என்ற சடங்கு ஆணாதிக்கவாதிகளாக மாற்றி
விடுகிறது என்கிறார் நண்பர் ஒருவர்…
-
#உண்மைதானோ..?
-------------------------------------------------------------
உன் நினைவை எங்கும் இறங்கி வைக்க
மனமில்லை…
சுமந்து கொண்டே திரிகிறேன்..!
-----------------------------------------------------------------------
-------------------------------------------------------------
டாக்டர் சொல்லாமலேயே
மூச்சை இழுத்துவிட்டான் நோயாளி
எதிரே நர்ஸ்!
----------------------------------------
மெளசுக்கு மவுசு கணிணியில்
மெளசால் ரவுசு
கழனியில்
--------------------------------
ஓடும் வாகனம்
விடும் மூச்சு
கருத்தது காற்று !
--------------------------------------------------
அஹிம்சையை போதிக்க
ஆசிரியர் வந்தார்
கையில் பிரம்போடு....
----------------------------------------------------------------
இறந்து போனவனை
கடித்தது எது?
நல்ல பாம்பு.
-------------------------------
காலில் வலி.
மருத்துவரிடம் போனேன்.
இப்பொழுது,
கையில் வலி.
ஊசி போட்டதால்!
சட்டை பையில் வலி.
காசு போனதால்!
----------------------------------------
பேருந்துக்குள்ளே
இடிதாங்கிகள்
பெண்கள்!
-------------------------------------------------
மந்திரித்த மரத்தில் பழம்.
பறித்தவன் ரத்தம் கக்குவானாம்.
சிரித்தன அணிலும் கிளியும்...
-------------------------------------------------
நலமுடன் உள்ளவர்.
மனசு சரியில்லை என்றார்.
உடலெங்கும் காயம்.
நலம் என்றார்.
-----------------------------------------------------------
அம்மா! தாயே பிச்சை போடும்மா,
போட்டபின் கேட்டேன்,
உன் பெயர் என்னப்பா?
'கோடீஸ்வரன்'
---------------------------------------------------
நெற்றியில் காயம்
ரத்தத்திற்குத் தெரியாது.
அவள் 'விதவை' என்று!
-------------------------------------------------------------------
வேண்டாம் எனக் கதறியும்
மரண தண்டனை.
கொடுத்தவர்கள் கேட்ட கேள்வி.
"கடைசி ஆசை என்ன?"
-----------------------------------------------------------------------------
மேடையில் ஜீவகாருண்யம் பேச்சு
ஓங்கி ஒரு அடி
கையில் ரத்தம் குடித்த
கொசு காலி.
----------------------------------------------------------------------------
எறும்பும் தேளும் இருந்தால் என்ன?
எடுத்துப் போட்டுவிட்டு இன்னும் குடிக்கிறேன்..
இனிக்கிறது வாழ்க்கைக் கள்!
---------------------------------------------------------------
வாயினால் கூறிய வார்த்தைகளை...
கேட்ட காதுகள்தானே வலிக்க வேண்டும்.
இதயமே நீ வலிப்பது ஏன்?
------------------------------------------------
குழந்தையிடம் முத்தம்
கேட்டால் மாமன்,
குமரியிடம் முத்தம்
கேட்டால் காமன்.
என்னப்பா உலகம் இது.
--------------------------------------------------------
ஈரம் என நினைத்து...
உரசிய தங்கம்...
உருகிய பின் உணர்ந்தது
தீண்டியது திராவகம்.
--------------------------------------------------
வரும் நேரமோ இருள்.
வந்து கொடுப்பதோ ஒளி -
நிலவு. :)
--------------------------------------------------------
காப்பாற்றி பறக்கவிட்ட பூச்சி
நேரே போனது
சிலந்திவலை நோக்கி
--------------------------------------------------------------
எங்களுக்கும் சிறகுகள் வேண்டும்
இது
இலையுதிர் காலம்
வேடந்தாங்கல் மரங்கள்!
----------------------------------------------------
''சில வாரங்கள் பூசுங்கள்..
சிவப்பழகு நிச்சயம்'' -
கருத்த முகத்தில் வேர்வையும்
சிரிப்புமாய் - விற்பனைப் பெண்
--------------------------------------------------------------------------------------
"உங்களுக்காக இத்தனை வருடங்கள் உங்கள் இஷ்ட்டப்படி வாழ்ந்தது போதும் .
இனிமேல் எங்களுக்காக எங்கள் இஷ்ட்டப்படி வாழுங்கள்" என்று என் மனைவி
அவளுடைய பிறந்த நாளான இன்று என்னிடம் கேட்டது பளிச்சென்று உறைக்கிறது எனக்கு!!!
இனிமேல் எங்களுக்காக எங்கள் இஷ்ட்டப்படி வாழுங்கள்" என்று என் மனைவி
அவளுடைய பிறந்த நாளான இன்று என்னிடம் கேட்டது பளிச்சென்று உறைக்கிறது எனக்கு!!!
------------------------------------------------
களத்துமேடும் இல்ல..
களஞ்சியமும் இல்ல..
கதிரறுப்பு முடிஞ்சிருச்சு..!
----------------------------------------------------------
வாகன ஓட்டியின் பார்வையில் -
கொளுத்தும் மதியம்...
தகிக்கும் வெப்பம் ...
மெ..ல்..ல... மாறும் சிவப்பு விளக்கு..!
கணவன் - மனைவி சண்டை
அமைதியாக முடிந்தது
பாத்திரங்கள் பேசிக் கொண்டன...
பெண்களுக்கு 33 சதம் என்ன?
பாதிக்கும் மேலே இடம் தந்தார்
படுக்கையிலே தலைவர்!
-----------------------------------------------------------
குளிர்காலத்துக்காக கோடையில் உழை
கோடையை எண்ணி குளிரில் மகிழ்
கற்றுக்கொடுக்குது கட்டெறும்பு..
-----------------------------------------------
தென்னை மரத்தில்
ஓலை தட்டி.
'கோக்'குடன் விக்ரம்!
---------------------------------------------------
குருடனுக்கு விளக்கேற்றி
வீணாய்ப் போனது
விலைமதிப்பற்ற எண்ணெய்!
-----------------------------------------------
சேற்றில் எருமை
சுத்தமான நெய்யாம்
தொலைகாட்சியில் விளம்பரம்
--------------------------------------------
பூ விற்று
பிழைப்பு நடத்துகிறாள்
விதவை.
-----------------------------------
வெண்மைக்கு
இழுக்கு....
விதவைகோலம்.!
கருமை
கௌவரவிக்கப்படுகிறது...
கார்மேகம்...!
பலருடன் உறவு
கொள்பவள் என்று
ஊருக்கு வெளியே
இருக்கச் சொன்னார்கள்,
அவளுடன் உறவு
கொண்ட பெரியவர்கள்.
-
-
----------------------------------------------------
அத்துணையும் துறந்த
மகாவீரரைக் காக்க
சுற்றிலும் கோட்டை!
ஆங்கிலப்படக்கதை
அப்பட்ட திருட்டுத்தழுவல்
அழகிய தமிழில் தலைப்பு!
திருடிய கதைக்கு
தமிழில் தலைப்பு - சொந்தம்..!!
---------------------------------------------------------------
சந்திரன்,
தான் ஒளி பெறும் சூரியனுக்கு
நன்றி கூறுகிறதோ இல்லையோ..
நாம் கூறுவோம்
நம் சூரியனுக்கு....!!
----------------------------------------------------------
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
முழங்கினார் சட்டசபையில்
ஜாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.
-----------------------------------------------------------------
காலை
கண்ணகி பட்டிமன்றம்
தலைவர் தலைமையில்.
இரவு
தலைவர் தனியறையில்
அருகில் விலைமகள்!!!
காலையில் கண்ணகி..
மாலையில் மாதவியோ..?
---------------------------------------------------------
இழந்துவிட்ட இளைஞனுக்கு ஆசை.
கற்புள்ள பெண்ணை மணமுடிக்க!
-------------------------------------------------------------------------------------
சாலையை கடக்க
முயன்ற பொழுது
அடிபட்டு இறந்தார்
போக்குவரத்து அதிகாரி...
No comments:
Post a Comment