10.11.15

தமிழ் ஹீரோக்களின் இனிவரும் படங்களின் பெயர்கள்.....

அஜித் : மங்காத்தா,மாரியாத்தா , செல்லாத்தா

விஜய் : கத்தி,அருவா,குண்டூசி, கடப்பாற

விக்ரம் ; I,J,K,L M....

சூர்யா : சிங்கம், கரடி, கழுதை,,,

கார்த்தி: நான் மகான் அல்ல, நான் சிவகுமார் மகனும் அல்ல, நான் மனுசனே அல்ல ...


தனுஷ் : படிக்காதவன், எழுதாதவன், வெலங்காதவன்,

ஜீவா : SMS,MMS, MISSED CALL,


விஷால்: சத்தியம், பைத்தியம்,சூனியம்,,


சிம்பு: விண்ணைத்தாண்டி வருவாயா, சுவரைத்தாண்டி வருவாயா, அட்லீஸ்ட் துண்டையாவது தாண்டி வருவாயா?,,,

மாதவன்: குரு என் ஆலு,உஷா உன் ஆலு அப்ப கொளரி யாரோட ஆலு?

நீங்க மட்டும் சிரிச்சா போதுமா?

மத்தவங்களையும் சிரிக்க வையுங்க பாஸ்
"உங்களுக்கு நல்லதா பார்த்து எதையுமே செலக்ட் பண்ணத் தெரியாதா?"

-என மனைவி நம்மிடம் கேட்கும் போது  அவளையே பார்ப்பது தான்,

"அர்த்தம்"பொதிந்த பார்வை!
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக் கொண்டது.

''எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும்.'

உனக்கு ..?

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது.

ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது.

பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக் கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி வேடர்களிடம் மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

ஆம்.,நண்பர்களே.,

இந்தக் கதையின் நீதியாதெனில்.,

''சந்தேகத்துக்குரிய நிச்சயமில்லாத நூறு வழிகளைவிட
பத்திரமான ஒரு வழியே மேல்.''
எவரோ விதைத்த விதையில் வளர்ந்த மரத்தின் கனியை நாம் சுவைத்து அந்தமரம் வீசும் தென்றலை சுவாசித்து எவரோ ஒருவருக்கு கடனாளியாகிறோம்!

நாமும் ஒரு விதை விதைத்து அந்த மரத்தின் கனியை யாரோ ஒருவர் சுவைத்து அந்த மரத்தின் காற்றை யாராவது  அனுபவித்தால் தான் நாம் பட்ட கடன் தீரும் !

விதை விதைப்போம்...

மரம் வளர்ப்போம்...

கடன் தீர்ப்போம் !!!
-
-
Green-Clean Vedasandur 
? வானிலை அறிக்கை :


தமிழ்நாட்டில் பரவலாக ☁மழை பெய்ய  உள்ளதால் அரசு பேருந்தில்  பயணிப்பவர்கள் தயவு செய்து குடை☔ எடுத்துச் செல்லவும்💃💃💃
#‎2016_தேர்தல்‬ :
இது அரசியல் பதிவு இல்லை....விழிப்புணர்வு பதிவு மட்டுமே ....

கொங்கு தலைவர்களே சிந்தியுங்கள் ...

நீங்கள் சுயநலத்திற்காக ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தனித்தனியாக அரசியல் என்று நிற்பதால் நம் மானம் போகிறது, நல்லதும் நடப்பதில்லை ....

யோசியுங்கள் எந்த கவுண்டனும் வேறு எந்த கட்சிக்கும் போகாமல் ஒற்றுமையாக இருந்தால் நம் பண்பாடு,பாரம்பரியம் எல்லாம் பாதுகாக்கப்பட்டுஇருக்கும்,...
வார்டு முதல் மந்திரி வரை நம் ஆட்கள் மட்டுமே இருந்திருக்கலாம் ....

நல்ல கொள்கை,நிர்வாகத்திறன் இல்லாமல் வெற்றி இல்லை ...
நிர்வாகத்தை செவ்வனே செய்து திராவிடம் வெற்றி பெறும்போது நம்மால் முடியாதா ???
நாம் ஒன்றுபட்டு அவர்களை கூட்டணி க்கு காக்க வைப்பதே உண்மையான வெற்றி...
அவர்களிடம் கூட்டணிக்கு அலைந்து 4,5 சீட் வாங்குவதில்லை ....
பிழைப்புக்காக வந்தவனிடம் போய் பிழைப்பதா நாம் ???....
உங்கள் கெளரவம் எல்லாம் தேர்தல்,கூட்டணியில் காணாமல் போவது ஏன் ??.

நீங்கள் கட்சி ஆரம்பித்தவுடன் ஓடிவரும் இளைஞர்கள் உங்களுக்காக வரவில்லை. #‎கொங்கு‬ என்ற பெயருக்காக தான் வந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து இனத்திற்காக பாடுபடுங்கள் ....
ஒன்றுபடுங்கள் ....
நீங்கள் ஒன்றாக இணைந்தால் இன்னும் நிறைய பேர் இணைவார்கள் ...

‪#‎ஒற்றுமை_இல்லையெனில்
#கண்முன்னே_இனம்_அழியும்‬ ...
.
‪#‎ஒற்றுமை_நிறைந்த_சமூகமே
#உயர்வான_சமூகம்‬ ...
இந்தியாவின் கெஜ்ரிவால்  கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி  தோராயமாக  !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது  பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்  சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.  ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில்  ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்  (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன்  பகிர்ந்துகொள்கிறோம் அது  போல   இதையும் இந்தியர்கள்  அனைவரும் அடையும் படி  அனுப்புகவோம்
என் குடும்ப பசி மட்டும் தீர வேண்டுமென்றால் ஏரோபிளேன் ஏறியிருப்பேன்...

என் மக்கள் பசி தீர வேண்டுமென்பதற்காக ஏர்கலப்பையை ஏந்தினேன்..!

‪#‎விவசாயி‬.
ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல

சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைரலாக சுற்றிவரும் ஒரு மெசேஜ் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக உள்ளது. அந்த தகவலை பாருங்கள்!

ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியால் கண்டறிவது போல், தற்போதைய நம்மூரு நாகரிகத்தை, அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் வரலாறு எப்படிப் புரிந்துகொள்ளும் என சிந்தித்துப் பார்த்ததில் இருந்து சில சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கற்பனை:

பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் உரிமை அரசாங்கத்திடமே இருந்திருக்கிறது. அப்படி கொள்ளையடிக்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அவரவர்க்கென தனித்தனி சின்னங்களும் வண்ணக் கொடிகளும் இருந்திருக்கின்றன!

வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டிருக்கிறது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஊஞ்சலாடியபடி இனிதே பயணிக்கும் முறை இருந்திருக்கிறது. நடத்துநர் என்றழைக்கப்பட்டவர், விசில் என்ற இசைக் கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது இசைக்கேற்ப பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டபடி இயங்கியிருக்கின்றன!

சமையல் செய்வதற்கென மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். நீர் அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கிலான பாட்டில் முதல், மிக்ஸி கிரைண்டர் வரை அனைத்திலும் ஒரு பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததன் காரணமாக அவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!

பொதுமக்களில் வயதால் மூத்தவர்கள் மட்டுமே அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். அந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் சுவர்களில் அவர்களின் பெயர்களையும் உருவத்தையும் வரைந்து, மறக்காமல் அவர்களின் முதுமையை குறிக்கும்வகையில் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்!

பிளெக்ஸ்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை அக்காலத்தில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட அவை மண்ணில் மக்காமல் கிடந்து உலகின் அழிவுக்கே காரணமாக இருந்திருக்கின்றன.

பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிக் குட்டி கழிப்பறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டுள்ளன. அவை தவிர, நகரின் முக்கிய வீதிகளில் மூத்திரச் சந்து என்ற திறந்தவெளிப் பகுதியில், எவ்வித நெருக்கடியுமில்லாமல் சிறுநீர் கழிக்கும் வசதி செய்து தந்திருக்கிறார்கள். அப்படி சிறுநீர் கழிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்காக கவர்ச்சிப் பட சுவரொட்டிகளை மூத்திரச் சந்தின் சுவரெங்கும் ஒட்டும் முறையும் கையாளப்பட்டிருக்கிறது!

சாலைகளனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கருங்கற்களின் மீது, பயணிப்பவர்களை காத்து கருப்பு அண்டக் கூடாதென்பதற்காக தார் என்ற கறுப்பு பொருளை லேசாக தெளித்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்பட்டுள்ளது!

ஒரு பக்கம் பசுமையான விவசாய வியாபாரம் அமோகமாக நடந்து வந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் விவசாய நிலங்களை பல வண்ணங்களில் அழகுபடுத்தி விவசாய நில வியாபாரமும் அமோகமாக நடந்து வந்திருக்கிறது! விவசாய நிலங்களில் வீடு கட்டி, மொட்டை மாடிகளில் தொட்டிச் செடிகளில் விவசாயம் செய்யும் அதிநவீன விவசாயத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்!

ஏரிகள் என்ற பெயரிலான அபாயகரமான நீர் நிறைந்த பள்ளத்தாக்குகளை மேடாக்கி வீடுகள் கட்டவும், அந்த வீடுகள் கட்டும் கற்களுக்காக, மலைகள் என்றழைக்கப்பட்ட மேடான பகுதியை வெட்டியெடுத்து சமப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது!

மக்களின் பொழுதுபோக்குக்காக செல்வந்தர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள், உருண்டையான பந்து என்ற ஆயுதத்தாலும், பேட் என்றழைக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதத்தாலும் மோதிக்கொள்ளும் விளையாட்டு நடைமுறையிலிருந்தது. அவர்களில் யார் ஜெயிப்பார்கள் தோற்பார்களென பந்தயம் கட்டும் முறையும் இருந்து வந்திருக்கிறது!

இவ்வாறு செல்கிறது அந்த வாட்ஸ்சப் மெசேஜ்.

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog