10.11.15

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக் கொண்டது.

''எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும்.'

உனக்கு ..?

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது.

ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது.

பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக் கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி வேடர்களிடம் மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

ஆம்.,நண்பர்களே.,

இந்தக் கதையின் நீதியாதெனில்.,

''சந்தேகத்துக்குரிய நிச்சயமில்லாத நூறு வழிகளைவிட
பத்திரமான ஒரு வழியே மேல்.''

No comments:

Post a Comment

நான் ஒரு விவசாயி.

My photo
CHENNAI, TAMILNADU, India
Work "MORE",Talk "LESS"
Powered By Blogger

Search This Blog