கரண்ட் இல்லாம சரியாத் தூங்காம, நிறையப் பேரு கொஞ்ச நாள்ல பைத்தியம் பிடிச்சுஅலையப் போறாங்க!
----------------------------------------------------------------------------
ஒரு சொட்டு மழை நீரை குடிக்கக்கூட இந்த நகர மண்ணுக்கு உரிமை இல்லை #கொஞ்சம்மழைக்கு எத்தன தண்ணி. ஒரு லார்ஜ்கு ஓவரா ஆடுற புதுக்குடிகாரன் போல
-------------------------------------------------------------------------------------
யார்யாரோ ஊட்டும் அவநம்பிக்கைகளை விட,
யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான் நகர்கின்றன நாட்கள்!
யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான் நகர்கின்றன நாட்கள்!
--------------------------------------------------------------------------------------------------
உலகத்திலேயே வெளியான முக்கால் மணி நேரத்துல ”வெற்றி நடை” போடுவது தமிழ்சினிமா ஒன்றாகத்தான் இருக்கமுடியும்
#இந்த வெற்றிநடை ரவுசு தாங்க முடியல
------------------------------------------------------------------------------
ஒருவரையே Blogல Follow பண்ணி, Google+ல Add பண்ணி, Twitterல Follow பண்ணி,
கடைசியாFacebookல Friend
ஆக்கும்போது புரிகிறது.
உலகம் உருண்டையேதான்னு!
--------------------------------------------------------------------
எதிர்பார்த்த அளவு எது நமக்கு கிடைக்கலையோ அதுபத்தியே தான் சிந்தனை, பேச்சுஇருக்கும் #காதல் - முத்தம் - குடி - பணம் - பதவி - இன்ன பிற! :)
ஆழ்ந்த உறக்கம் ஒரு வரம்.
-------------------------------------------------------------------------------------------
டீசல் ரூ.5 விலை உயர்வு - உடனடியாக தேநீர் விலை மற்றும் பேருந்து நிலைய சிறுநீர்க்கழிப்பிடக் கட்டணம் அதிரடி உயர்வு! #இந்தியாடா!
--------------------------------------------------------------------------------
கரையான் புற்றுக்குள் பாம்பு குடி புகுவதுபோலே,
காதல் மனதில் ஊடுருவுகிறது காமம்!
----------------------------------------------------------------------
சாமானியனை அச்சுறுத்தும் மிகப்பெரிய பயங்கரவாதிகள்
“புதுப் பணக்காரர்கள்”
-----------------------------------------
இனிமே ’மழை’யும் அரசு வழங்கும் ”விலையில்லாப் பொருட்கள்” மாதிரிதான் போல, எப்பவாச்சும் வரலாம்,வரமாலும் போகலாம்! :((((
--------------------------------------------------
பெட்ரோல் விலை உயர்வுக்கு முன்பும்,
பெட்ரோல் விலை உயர்வுக்குப் பின்பும்
”அதே அளவு ட்ராபிக் ஜாம் தான்!”
--------------------------------------------------------------
தேர்வு எழுதும்போது ‘பிட்’ வழங்கப்படும்
என சில தனியார் பள்ளிகள்
இனி விளம்பரம்செய்தாலும்
ஆச்சரியப் படுவதற்கில்லை!
--------------------------------------------------------------------------
பள்ளி கல்லூரி புரிய வைக்காத ”கெமிஸ்ட்ரியை”
பருவம் புரிய வைக்கின்றது!
---------------------------------------------------------------------
நடிகையுடனான வீடியோ போலி என
அமெரிக்க நிபுணர்களின்
ஆய்வறிக்கை சொல்லிவிட்டது - நித்தியானந்தா
#ஆப்கானிஸ்தான்ல ஆய்வு பண்ண
ஆள் கிடைக்கலபோல?
------------------------------------------------------------
விசையூட்டிய பெண்டுலம்
# மனது
-------------------------------------------------
குரைப்பதை குறைக்கனும்!
---------------------------------------------------
நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது - வடிவேலு
#ஆமா, இவர வேற ஆயிரம் பேரு அணைபோட்டுத் தடுக்குறாங்களாக்கும்!
-------------------------------------------------------------------------------------
“புகழுக்கு மயங்காதவர்” எனப் புகழ்ந்தும் வீழ்த்தலாம்!
-------------------------------------------------------------------------------------
ஈமூ கோழிகள் இந்தியாவின் தேசியப்பறவை
என அழைக்கப்படலாம்!
# விளம்பரம்விட்டில்கள் :(
------------------------------------------------------------->
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கும் தலைவர்களுக்காக
ஓங்காரமாய் சண்டையிடும் தொண்டர்கள்!
----------------------------------------------------------------------------
குழந்தைகள் மீது செலுத்தும் கோபம்போல் கோழைத்தனம் ஏதுமில்லை!
------------------------------------------------------------
மறதி ஓர் விடுதலை!
அமைதி என்பது சூழல் தரும் ஒரு வரம்
------------------------------------------------------------------
கடிக்கும் கொசுவைத் தடுக்க முடியாதபோது
வலிமையற்றவனாகிறேன்!
------------------------------------------------------------------
"ஒருசில கருத்துகளைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்” என பேச்சாளார் சொன்னால்மனுசன் இப்போதைக்கு முடிக்க மாட்டார் என்று அர்த்தம்
--------------------------------------------------------------------------------
கொசு மருந்தைக் கண்டுபிடிச்சது,
யாரா வேணா இருக்கலாமுங்க,
ஆனா வீதியிலமருந்தடிச்சு
வீட்டுக்குள்ளே கொசுவை அனுப்புற
தில்லாலங்கடி வித்தையைக் கண்டுபிடிச்சது,
நம்ம ஊரு முனிசிபாலிட்டி விஞ்ஞானிங்கதான்!
---------------------------------------------------------------------------
இணையக் கடலில் நீச்சல்
அடிக்கலாம்னுதான் போறோம்...
ஆனால், கொடுமை என்னன்னா....
மூழ்கிப்போய்டுறோம் !
#உன்னைப்போல் ஒருவன்! :)
-----------------------------------------------------------
தினசரி 200 SMS மட்டுமேனு லிமிட் பண்ணினமாதிரி,
இனிமே ஒரு நாளைக்கு
இவ்ளோதான்லஞ்சம்/
இவ்ளோதான் சரக்கு/
இவ்ளோதான் ஊழல்னு
லிமிட் பண்ணுவாங்களா?
-----------------------------------------------------------------------
இன்னும் போதாமல் இருப்பது “அன்பு”.
-----------------------------------------------------------------------------”எலுமிச்சை சோத்துக்கு உருளைக்கிழங்கு வறுவல்தான் ஜோடினு இந்திய அரசியல்அமைப்புச்சட்டத்துல
எதும் இருக்கா (or) மாத்தினா எதும் தெய்வக்குத்தமா?
------------------------------------------------------------
விஷத்திற்கும் விலை உண்டு!
------------------------------------------------------------------------
கோபத்தை எப்படியெல்லாம் செலுத்தலாம்
என்பதில் தெளிவாய் இருக்கும்மனுசனுக்கு,
நேசத்தை எப்படிச் செலுத்து என்பதில்
மட்டுமே பெருங்குழப்பம்!
--------------------------------------------------------------------------------
ஞாயித்துக்கெழமையும் 'பிசி'யாக இருப்பது
புத்திசாலித்தனமா, முட்டாள்த்தனமா!?
----------------------------------------------------------------------------------
அதெப்படிங்க எசமான்.... கூட்டணிக்குள்ளே இருக்கிற வரை சீட்டுக்கு கெஞ்சுறீங்க.வெளியே(த்திய) வந்தவுடன் ”விடுதலை விடுதலை”னு கூவுறீங்க!
-----------------------------------------------------
இந்த மழை மண் வாசனையைக்
கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை.
தார் ரோட்டில்தேய்ந்த டயர்களின் நாற்றத்தை
அகற்றும் அளவிற்கேனும் வந்தால் போதும்!
No comments:
Post a Comment