அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் போதும்
என்று தெரிந்தும் மூன்று மணிக்கே அலாரம்
வைக்கும் முன்ஜாக்கிரதைக்காரர்கள், ஐந்து மணிக்கு
மேலேயே விழித்து எழுகிறார்கள்…!
----------------------------------------------------------------------------
சலூனில் ஷேவிங் செய்து கொள்வது கழுத்திற்கு நல்ல பயிற்சி.
360 டிகிரியிலும் திருப்பறாங்கய்யா கழுத்தை…!
--------------------------------------------------------------------------------------
பொண்ணைப் பார்த்துட்டு ஊருக்குப்போய் லெட்டர் போடுறோம்னுசொன்னவங்களும்,
‘ஹெச்.ஆர்.கால்பண்ணுவாங்கன்னு
சொன்னவங்களும்
பதில் சொன்னதா…சரித்திரமே இல்லை..!
----------------------------------------------------------------------
நான் நானாவே இருக்கேன்!
நீங்க நீங்களாவே இருங்க!
எதுக்கும் நடுவுல இருக்கட்டும், இந்த அருவா!
--------------------------------------------------------------------------------------
”வளர்த்த கெடா மார்ல பாயுது”னு சொல்ற ஆடு
மேய்ப்பர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி:
“வெட்டுறதுக்குத்தானே நீங்களும் நீவிநீவி
வளர்த்துறீங்க”
---------------------------------------------------------------
’சீட்’ நிரம்பாத என்ஜினியரிங் காலேஜ், ’வீட்டுமனை’ விற்பனையாகாத ரியல் எஸ்டேட்கம்பெனி
இடையே லோக்கல் டிவி விளம்பரங்களில் கடும் போட்டி!
இடையே லோக்கல் டிவி விளம்பரங்களில் கடும் போட்டி!
-
--------------------------------------------------------------------
2Hrs லேட்டாகும்னு கூடச்சொல்லுங்க, 120 நிமிசம் வெயிட் பண்ணித் தொலைக்கிறோம்.ஆனா மூனே நிமிசத்துல வந்துடுறேனு முக்கா மணி நேரம் படுத்தாதீங்க!
-------------------------------------------------------
எல்லாவற்றையும் சந்தேகிப்பவன் இறுதியாய் ஒரு நாள் சந்தேகத்தையும் சந்தேகிப்பான்!
--------------------------------------------------------------------------------------காலையில் ரிலீஸாகுற படத்துக்கு அன்னிக்கு மதிய மாலை மலர்ல ”அரங்கு நிறைந்தகாட்சி”னு விளம்பரம் கொடுக்கிற வித்தைய
எங்கதான் கத்துக்கிட்டாங்ளோ!
எங்கதான் கத்துக்கிட்டாங்ளோ!
-
--------------------------------------------------------------------------
செல்போன்ல சிக்னல் கிடைக்காதபோது சப்தமாகப் பேசினால், எதிர்முனையில்கேட்கும்ங்கிறதைக் கண்டுபிடிச்சது யாரா இருக்கும்!?
-
---------------------------------------------------------------------------------------
"அரசு பஸ்களில் ரூ.10க்கு மினரல் வாட்டர்” தனியார் பேருந்துகளைவிட அரசுப்பேருந்துகளில் கட்டணம் அதிகம்.
தனியாரைவிட அரசு தண்ணீர் விலை குறைவு
--------------------------------------------------------------------
பார்வைக்கு அழகாய் இருக்கும் மலர் வாசனையாகவும் இருக்க வேண்டுமென்பதில்லை!
-------------------------------------------------------
எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல், எதைச் சொன்னாலும்நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின் விந்தை!
----------------------------------------------------------------------------------சிரிக்கவியலாமல் இறுகியிருக்கும் தருணங்களில் சிரிக்கவைக்கும் வல்லமைகொண்டவனும் தெய்வமே!
------------------------------------------------------------------------------------
வீட்டைவிட்டு வெளியே சென்றாலும், உள்ளேயே இருந்தாலும் கதவுகளை
மூடியேவைத்திருக்கவேண்டும் எனும்
மூடியேவைத்திருக்கவேண்டும் எனும்
பாடத்தைத்தான் நகரம் முதலில் கற்றுத்தருகிறது
-
---------------------------------------------------------------------------
நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். மூன்று செல்ஃபோன்கள் வைத்திருந்தார். இரண்டுகாதுகள்தான் அவரிடமும் இருந்தன.
----------------------------------------------------------------------- <Saving அக்கவுண்ட்ல கட்டின பணம் மாதிரி பொசுக்னு தீர்ந்து போயிடுது ஞாயிற்றுக்கிழமை.
-------------------------------------------------------------
தலையைவிட வால் தான் அதிகம் ஆடுகிறது!
--------------------------------------------------------------------------
கடல் நீரில் கால் நனைக்கும் எல்லோரிடமும் எழும் கத்தல்
மகிழ்ச்சியின் குரலா?
பயத்தின்மொழியா?
அடைந்துகிடக்கும் அழுத்தத்தின் பிரசவமா?
மகிழ்ச்சியின் குரலா?
பயத்தின்மொழியா?
அடைந்துகிடக்கும் அழுத்தத்தின் பிரசவமா?
-
------------------------------------------------------------
குடிப்பதில் தெளிவாக இருப்பதைவிட,
குடித்த பாட்டிலை உடைப்பதில்
தெளிவாகஇருக்கின்றனர் மக்கள்.
---------------------------------------------------------------------
நன்றி சொல்கையில், நட்பின் அதிபிரியத்தில்
’நன்றி எதுக்கு’னு மறுப்பவர்களிடம் நன்றியை எப்படிச்சொல்ல?
#ஹெல்ப் மீ திருவள்ளுவரே!
’நன்றி எதுக்கு’னு மறுப்பவர்களிடம் நன்றியை எப்படிச்சொல்ல?
#ஹெல்ப் மீ திருவள்ளுவரே!
-
----------------------------------------------------------------------------
”சம்மர் கோச்சிங் கிளாஸை” கண்டுபிடித்தவர்கள்
சூனியக்கார கிழவிகளின் நவீனவார்ப்புகள்!
”சம்மர் கோச்சிங் கிளாஸை” கண்டுபிடித்தவர்கள்
சூனியக்கார கிழவிகளின் நவீனவார்ப்புகள்!
-
--------------------------------------------------------------------
வறுத்த கடலை பொரிக்கு நிகரான காம்பினேசன்
இன்னும் கண்டுபிடிக்கப்படல.
-------------------------------------------------------------------------------------------
’பார்த்தவுடன் எழுந்து நிற்பதை’ மரியாதைனு மொதமொத
கண்டுபிடிச்ச விஞ்ஞானி யாரா இருப்பாங்க!
கண்டுபிடிச்ச விஞ்ஞானி யாரா இருப்பாங்க!
-
------------------------------------------------------------------------------
எவனொருவன் தன்னை ’எளியவன்’ என உரத்துச் சொல்கிறானோ,
அவன் எளியவனாகஇருக்க விரும்பியிருக்கவில்லையென்று அர்த்தம்!
அவன் எளியவனாகஇருக்க விரும்பியிருக்கவில்லையென்று அர்த்தம்!
--------------------------------------------------
கடந்த 2 முறை ஆளும் கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிய கர்நாடகா வாக்காளர்கள்,
இந்தமுறை எதிர்க்கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிட்டாங்க!
இந்தமுறை எதிர்க்கட்சியைத் தீர்மானிப்பதில் குழம்பிட்டாங்க!
------------------------------------------------------------------------
முதுமையில் பணம் என்பதைவிட
சட்டெனத் தழுவும் மரணம் முக்கியம்!
-----------------------------------------------------------------
தெளிவாக இருக்க முயல்வது போன்ற
கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!
கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!
-----------------------------------------------------
கொதிக்கும் வெயிலில் பெட்ரோல் தீர்ந்து
வண்டியைத் தள்ளுபவன்
துரதிருஷ்டசாலியாகவோ,
பாவப்பட்டவனாகவோ
மட்டுமே இருக்க வேண்டும்என்பதில்லை.
சரியான நேரத்துக்குப் பெட்ரோல்
போடாத சோம்பேறியாகவும்
கூடஇருக்கலாம்.
------------------------------------------------------------
தோல்விகள், துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதை
எழுதும் வாய்ப்பு வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!
எழுதும் வாய்ப்பு வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!
------------------------------------------------------------------------------------------
ரொம்ப பிசியா இருக்கிற ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்து பார்த்தாத் தெரியும், உடல்ஆரோக்கியத்தோட வாழ்ந்துட்டு
இருக்கிறதே எத்தனை பெரிய வரம்னு!
-----------------------------------------------------------------------
நிஜமா சொல்றேன் “ஓசி சோத்துக்கு” ருசி அதிகம்!
------------------------------------------------------------------
கம்மஞ் சோற்றைத்தான் 'அமிர்தம்னு'
சொல்லியிருப்பாங்களோ!?
--------------------------------------------------------
அறிமுகங்கள் முடிந்து,
ஆர்வங்கள் பகிர்ந்து,
எல்லாம் கரைந்த ஒரு நற்பொழுதில்(!)
எளிதாய்ஆரம்பிக்கிறார்கள் ’பொறணி’ பேச!
-----------------------------------------------------------------------
”நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே!?”
எனும் பீடிகைகளில் தப்பாநினைக்க
ஏதோ ஒன்று இருக்கவே செய்கின்றது!
------------------------------------------------------------------
இதென்னடாது காலண்டர்ல
பிப்ரவரி 28ம் தேதிய கிழிச்சா,
மார்ச் ஒன்னாம் தேதி வருது.
#நடுவுல கொஞ்சம் தேதியக் காணோம்!
------------------------------------------------------------------
மவனே, இந்த ”போர் அடிக்குது”ங்ற வார்த்தையை கண்டுபிடிச்சவன் மட்டும் எனக்கு எதிரில் அப்போது வந்திருந்தால், கொலைக்கேசு ஆனாலும் சரினு வண்டிய அப்படியே ஏத்திக் கொலை செய்திருப்பேன். அப்போது தென்படவில்லை, அவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------
பசி இனிது...!
------------------------
'எதுவும் சில காலம்தான்' எனும்
சொற்றொடர் மட்டும் நீண்ட காலமாய் !
------------------------------------------------------------------------
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்
-------------------------------------------------------------------
உடலிற்கு ஓய்வளித்தாலும் உங்கள் மூளைக்கு
ஓய்வளிக்காதீர்கள்,,,நம் வெற்றி மூளையின் ஓர்
மூலையில்தான் இருக்கிறது
--------------------------------------------------------------------------
திறம்பட திருடத் தெரியாமல் மாட்டிக் கொள்பவனை
மட்டுமே வரலாறு ‘திருடன்’ என்று அழைக்கின்றது..!!
-------------------------------------------------------------------------------
சிறகுகள் முளைக்கும் வரைதான் கூட்டுக்
குடித்தனைம்…பறவைகளுக்கு..!!
-------------------------------------------------------------
வாழ்க்கை ஓர் நாடக மேடை தான்,
இங்கு இயல்பாய் நடிக்க சொரனை தேவையில்லை…
------------------------------------------------------------------------------
டிவில தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைன்னு
சொல்லிக்கிட்டு இருந்தாங்க…கரண்ட் போச்சு…!
-
இனி 6 மணி நேரம் கழிச்சிதான் பாக்கணும்..!!
---------------------------------------------------------------------------------------
‘கறை’ இடம் மாறுவது நம் ஜனநாயகத்தின் சிறப்பு-
வாக்காளர் விரலிலிருந்து எம.எல்.ஏ. கரங்களுக்கு..!
-----------------------------------------------------------------------------------
குளியலறையில் தண்ணீர் திறந்துவிடும் வரை ஒட்டிக்
கொண்டே இருக்கிறது சோம்பலும், தூக்கமும்…!
------------------------------------------------------------------------------------------
எதிரிகளைப் போல நாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால்
நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்..!
--------------------------------------------------------------------------------------------
மருத்துவ சேர்க்கைக்கு விலையை விசாரிக்கச் சென்ற
கல்லூரிகளில் நம் கைபேசிகளை தனியே வாங்கி
வைதுக் கொண்டார்கள். ஆங்காங்கே உற்று நோக்கும்
சிசிடிவி கேமராக்கள்.
உக்கும்.. உஷாரா கொள்ளையடிக்கிறாய்ங்களாம்..!
-----------------------------------------------------------------------
சில பார்வைகளில் கண்டறியும்
பிரியம், நூறு கோடிவார்த்தைகளாலும்
சொல்ல முடியாதது..!
---------------------------------------------------------
அடுத்த மாசச் சம்பளத்தில் ஒரு ஏ.டி.எம்.மெஷின்
வாங்கிடணும்.
மாசா மாசம் 1-ம் தேதி லைன்ல நிற்கிற பொழப்பே
இருக்கக்கூடாது..!
-------------------------------------------------------------
தோல்விகளை அதிகம் நேசிப்பவர், டுடோரியல் காலேஜு
ஓனர்..!
-----------------------------------------------------------
நண்பர்களாகப் பிரிவோம் என்பவர்களுக்கு…
நண்பர்கள் பிரிவதேயில்லை என்பது தெரியாதா..?
--------------------------------------------------------------------
பெரிய விஷயங்களைப் பேசுகிறார்கள் என்பதற்காக,
சின்ன விஷயங்களைப் புரிந்து கொள்வார்கள் என்று
எதிர்பார்க்க முடியாது.
----------------------------------------------------------
மனைவியின் மௌனமான பதிலுக்கும்,
மௌனமே பதிலாக இருப்பதற்கும்,
நிறைய வித்தியாசம் இருப்பதைப் புரிந்து
கொள்பவர் நல்ல கணவன்,
-----------------------------------------
தொலைத்த என் நினைவுகளை விட,
என்னை துளைத்த உன் நினைவுகளே,
அதிக வலிகளை விதைக்கின்றன…
--------------------------------------------------------
Hi!
SURPRISE FOR YOU
Click on the below link. You will get a black page. Click your mouse anywhere (& everywhere) on the page & see what happens! Better yet, click & drag your mouse over the black page.
Hope you will like it .
No virus.
கொன்று குவிக்கும்
கொடூர மயானத்தின் பெயர் -
பாதுகாப்பு வளையம்..
வீட்டுக்கார'னு'ம் பிச்சைக்கார'ரு'ம்..
ஏம்பா உனக்கு 5 ரூபாய் போட்டா என்ன பண்ணுவே..?
வாயார வாழ்த்துவோம் சாமி..
25 பைசா போட்டா..?
எங்க செலவுல திருவோடு வாங்கித் தருவோம்....!
-------------------------------------------------------------------------------------------------------
உணவு விடுதியில் காதலனும் காதலியும்...
காதலன் ; அன்பே.. நாம் இருவரும் ஒன்றறக் கலந்து விட்டோம் கண்ணே..!
காதலி ; அந்தக் கதையே வேணாம்.. ஒழுங்கா ரெண்டு ரவா தோசைக்கு ஆர்டர் கொடுங்க.. கஞ்சப் பிசிநாறி...!
------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம் பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.
அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.
வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை சொல்லிட்டு போவோம்...!
--------------------------------------------------------------------------------------------------
புயல் காரணமாக பள்ளிக்கு 3 நாள் விடுமுறை..
பள்ளி திறந்த பிற்பாடு ஆசிரியர் கேட்டார்.. பிள்ளைகளே..!
விடுமுறையை நல்ல வழியில் செலவிட்டீர்களா..?
ஒரு மாணவன் ; ஆமாம் அய்யா.. கடவுளை வணங்கினேன்..
என்ன வேண்டிக்கொண்டாய்..?
இன்னொரு புயல் வரவேண்டும் என்று...!!!
----------------------------------------------------------------------------------------------
நோயாளி.; ..டாக்டரய்யா..! வயித்துப்போக்கு அரெஸ்ட்
ஆயிடும்ன்னு மாத்திரை கொடுத்தீங்க.. மறுபடி வந்துடிச்சே...!
டாக்டர்.; . கவலைப்படாதீங்க.. "ஜாமீன்" ல வந்திருக்கும்..
இப்போ "அரெஸ்ட்" பண்ணிடறேன்..!
விருந்தாளியும்.. வீட்டு சிறுவனும்..
வாங்க மாமா.. ஆயுசு நூறு.. இப்போதான் அப்பா உங்களப் பத்தி சொல்லிட்டு இருந்தார்..
அப்படியா.. என்ன சொன்னார்..
கடன்காரப் பய வர்றதுக்குள்ள இலையைப் போடு.. சாப்பிட்டுட்டு ஓடறேன்னு அம்மாகிட்ட சொன்னார்.
No comments:
Post a Comment