என்னதான் தனித்துப் போட்டின்னு அறிவிச்சாலும்
வேட்பு மனு தாக்கல் பண்ணும்போது பத்து பேரு கூட
போயாகணும்…!
-
–எல்லா கட்சிளிடமும் நோட்டு வாங்கி நோட்டாவுக்கு
வாக்களிப்போர் சங்கம்
----------------------------------------------------
மீசையைத் தாண்டி கருமை படாமல்
டை அடிப்பது கஷ்டம்..!
-------------------------------------------------------------
வரையறையின்றி ஒரு பெண் உரத்துப்
பேசினால் பெரிய இந்த பூமி அதிரும்
இரண்டுபேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் வானத்து
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்
மூன்று பேர் சேர்ந்து அவ்வாறு பேசினால்
கடலலைகள் வற்றிவிடும்
-
பல பெண்கள் சேர்ந்து பேசினால் உலகம்
என்னாகுமோ
-----------------------------------------
அன்பு கிடைத்தவர்களுக்கு தெரியாது,
கிடைக்காதவர்களுக்கு புரியாது,
தொலைத்தவருக்குத்தான் தெரியும் அருமை..!
------------------------------------------------------------
உன் நண்பனைப் பற்றிச் சொல்
உன்னைப்பற்றிச் சொல்கிறேன் – இது பழசு
=-
உன் கம்ப்யூட்டரில் என்னென்ன சேமித்து வைத்திருக்கிறாய்
சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன் – இது புதுசு
--------------------------------------------------------------------
பேங்கஃல அக்கவுன்ட் வச்சிருக்கித விட, தெருமுனை
டீக்கடைகளில்தான் அதிகம் பேர் அக்கவுன்ட் வச்சிருக்காங்க..
------------------------------------------
சென்னையில் ஒரு தெருவில் எட்டுக்கும் மேற்பட்ட
இடங்களில் ஆண் பைக்கில் உட்கார்ந்துகொண்டும்,
பெண் நின்றுகொண்டு பைக்கின் ஹேண்டில்பாரை
பிடித்தபடியும் பேசிக்கொண்டிருந்தால், அந்தத்
தெருவில் பெண்கள் விடுதி இருக்கின்றது என்று
அர்த்தம்!
--------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------
அந்த ஆளுக்கு கடன் கொடுத்தா வாங்குறதுக்குள்ள நடையா நடந்து செருப்பு தேஞ்சிரும்ன்னு சோன்னேனே... அப்படியும் ஏன் பணம் கொடுத்தே..?
நான் என்ன அவ்வளவு முட்டாளா..? செருப்புக்கு காசு கழிச்சுகிட்டுதான் கடன் கொடுத்தேன்.. தெரிஞ்சுக்கோ..!
சுசி ; என்னா மாசி.. உன் செல்லுக்கு எப்போ கால் போட்டாலும் ஸ்விட்ச்டு ஆஃப் ன்னு சொல்லுதே.. ஆன் பணணவே மாட்டியா..?
மாசி ; ஐயோ...ஐயோ.. அது என்னோட காலர் ட்யூன்.. !
-----------------------------------------------------------------------------------
ஜூனியர் சுசி ; எங்கப்பா தீப்பெட்டி வாங்கினால் குச்சியை
எண்ணிப் பார்த்துதான் வாங்குவார்...
ஜூனியர் மாசி ; இது என்ன பிர்மாதம்..? எங்கப்பா
தீப்பெட்டி வாங்கினா எல்லா குச்சியும் எரியுதான்னு
கொளுத்திப் பார்த்துதான் வாங்குவார்..!
"நிறைய மெகா சீரியல் பார்ப்பீங்களோ..?
"ஏன்..?"
"இல்லே.. ரேஷன் கார்டுல, அபி, அரசி, அண்ணாமலை, செல்வி, தொல்காப்பியன், பாஸ்கர், இப்படி பேராவே இருக்கே.. அதான் கேட்டேன்.."
-------------------------------------------------------------------
அவரு தேர்தல்ல கள்ளவோட்டாலேயே ஜெயிச்சிருக்காருன்னு நினைக்கி�ன்.
எப்படிச் சொல்றீங்க?
தேர்தல்ல வோட்டுப் போட வராதவங்களுக்கு நன்றிங்கறாரே..
""எங்க சலூன்ல "கட்டிங்" பண்ணிகிட்டா "ஷேவிங்' இலவசம்!""
"அவ்வளவுதானா..? எங்க ஃபைனான்ஸ் கம்பெனிலே "சேவிங்" பண்ணினா
"மொட்டை" யே இலவசம்!""
------------------------------------------------------------------------------
கட்டித் தயிரில்
முளைத்த
குட்டிப் பயிர்
அவளின் முகப்பரு!
""என்னங்க இது.. உங்க
பையன் "யுனிவர்சிட்டி'ங்கறதை "யுனிவர்குட்டி'னு தப்பா படிக்கிறான்?''
""அவனுக்கு இங்க்லீஷ் புரிஞ்சுக்கற கெப்பாகுட்டி இல்ல..தயவு
செஞ்சு இதை வெளியில் சொல்லி, பப்ளிகுட்டி பண்ணாதீங்க சார்.
------------------------------------------------------------------------------------------------
முற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..
பிற்பகல் அடகு வை..!
-------------------------------------------------------------------------------------------------------
எதுக்கு உன் மனைவி படத்தை ஸ்கூட்டர்ல ஒட்டி வச்சிருக்கே..?
கொஞ்சம் ஸ்டார்ட்டிங் ட்ரபுள்.. அவ படத்தைப் பார்த்துகிட்டே உதைச்சாதான் கிளம்புது..!
-----------------------------------------------------------------------------------------------------
சேவை மனப்பான்மையோடுதான் நான் அரசியல் குதித்தேன்னு சொல்லிட்டு, இப்ப கோடி கோடியா சொத்து சேர்த்திருக்காரே நம்ம தலைவர் ?
போகப் போக தேவை மனப்பான்மை வந்திருக்கும்..!
---------------------------------------------------------------------------------------------
திரைப்படம் வரும் பின்னே
திருட்டு VCD வரும் முன்னே.
-----------------------------------------------------------------
நான் அந்தக் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கேன், எனக்கு அண்ணாதுரையை எல்லாம் நல்லாத் தெரியும்
நான் கொஞ்ச நாளாத்தான் அரசியலில் இருக்கேன். எனக்குத் தம்பிதுரையைத்தான் தெரியும..!
-------------------------------------------------------------------------------------------
"ஐயா என் மனைவியை ஒரு வாரமா காணுங்க"
"போட்டோ இருக்கா?"
"அசின் மாதிரி யாராவது இருந்தா கூட பரவால்லீங்க."
------------------------------------------------------------------------------------------------------
வேலைக்காரி : எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டுதானேம்மா செய்யறேன்... அப்புறம் ஏம்மா குறை சொல்றீங்க?
வீட்டுக்காரி : நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டும் செய்யணும், புரிஞ்சுதா?
-------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------
எனது மகனுக்கு நிறைய கதைகள் சொல்லியுள்ளேன். அதில் ஒன்று
ஒரு பாழடைந்த வீட்டில் நிறைய எலிகள் இருந்தன.
அவைகள் ஒடி விளையாடி சந்தோசமாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் ஒரு பூனை அந்த வீட்டிற்கு வந்திச்சாம்.அங்கு நிறைய எலிகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு பூனை சந்தோசம் அடைந்ததாம்.அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலியாகப் பிடிச்சு சாப்பிட்ட தொடங்கிச்சாம். எலிகள் மிகவும் பயந்து நடுங்கிச்சாம்.எலிகள் எல்லாம் ஒன்றுகூடி பூனையிடம் இருந்து எப்படித் தப்புவது என்று கதைத்தார்களாம். அதில் ஒரு எலி சொல்லிச்சாம் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது சொல்லட்டுமா என்று கேட்டது. ஆம் சொல்லு என்றதாம்.ஒரு மணியைக் கொண்டுவந்து காட்டி சொல்லிச்சாம் இந்த மணியை பூனையின் கழுத்தில் கட்டினால்,அது நடந்து வரும் போது டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்கும் நாங்கள் ஓடி ஒளித்து விடலாம். பூனை எம்மைத்தேடி ஏமாந்து போகும். நாம் பயமின்றி சந்தோசமாக வாழலாம் என்று கூறியது.இதைக் கேட்டதும் எலிகள் எல்லாம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தன. மிகவும் அருமையான யோசனை என்று சொன்னார்கள்.அப்போது ஒரு எலி, இந்த
மணியை யார் பூனையின் கழுத்தில் கட்டுவது என்று கேட்டுதாம்.இதைக் கேட்டதும் எலிகளின் மகிழ்ச்சி,ஆரவாரம் எல்லாம் குறைந்து போய்விட்டதாம்.யாரால் மணியை பூனையின் கழுத்தில் கட்டமுடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே "மியாவ்" "மியாவ்""மியாவ்" என்ற பூனையின் சத்தம் கேட்டவுடன் எலிகள் பயந்து நடுங்கியவாறு ஓடி ஒளித்துக் கொண்டன.
இதில் இருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் "முடியாத யோசனையால் எந்தப் பயனும் இல்லை".
திருமண நாள் வாழ்த்து
என் வாழ்வின் வழித்தடம்
இருண்ட சாலைக்கு ஒளித்தடம்
உருகிய உள்ளம் கொண்ட
பெருகிய இன்ப வெள்ளம் கண்ட
என் அண்ணன்(ஆசான் ) அண்ணிக்கு,
திருமண வாழ்த்து கவி .
இருமனம் இணைந்து
திருமணம் நடந்து
காலம் பல கடந்து
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து
ஞாலம் தங்களை
வியந்து பார்க்கும் வண்ணம்
வாழ்ந்து காட்டினீர் - இன்னும்
வாழ்ந்து காட்டுவீர்
இது திண்ணம் .
விட்டு கொடுப்பவன் - என்றும்
கெட்டு போவதில்லை என்பதற்கு
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி
நாங்கள் நேரில் கண்ட காட்சி .
நீங்கள்தான் பாசத்தை
ஆளுகின்ற ஆட்சி !
வாழுங்கள் பல்லாண்டு
இவையகம் உள்ளவரை !
ஆளுங்கள் நூறாண்டு
நீங்கள்தான் ந(வ)ல்லவரே !
மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை -
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு .
நீவிர் இருவரும்
செந்தமிழ் போல்
பைந்தமிழ் போல்
பல்லாண்டு பல்லாண்டு
வாழ்க .
என் வாழ்வின்,
வழித்தடம் இருண்ட சாலைக்கு
ஒளித்தடம் தந்தவள் என் மனைவி!
உருகிய உள்ளம் கொண்ட அவள்,
பெருகிய இன்பம் தந்தவள்!
உன்னில் வாழ்தல் எனது தவம்!
உன்னால் வாழ்தல் எனது வரம்!
இருமனம் இணைந்து
திருமணம் நடந்து
காலம் பல கடந்து
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து
ஞாலம் எங்களை
வியந்து பார்க்கும் வண்ணம்
வாழ்ந்து காட்டியிருக்கிறோம் - இன்னும்
வாழ்ந்து காட்டுவோம்.
நாங்கள் இருவரும்
செந்தமிழ் போல்
பைந்தமிழ் போல்
பல்லாண்டு பல்லாண்டு
வாழ வாழ்த்துங்கள்!
-
-
(குறிப்பு : எங்கள் வாழ்வு வசப்பட்ட நாள் - 12/09/1980.
மிக சிறிய வயதில் எங்களுக்கு திருமணம் நடந்ததால் 35 வருடங்கள் என்பது ஒரு கணக்கீடு ஆகி விட்டது.)
இன்று துவங்குகிறது
இல்வாழ்வில் முப்பத்தி
ஐந்தாம் ஆண்டு!
இன்னும் வேண்டும் எனக்கு
உன்னோடு வாழ நூறாண்டு!
ஒளிக்குவலையே நீ
உள் நுழைந்த நேரம்
உறவுகள் சூழ்ந்தது
ஒளிக்கற்றையாய்!
உன்னில் வாழ்தல் எனது தவம்!
உன்னால் வாழ்தல் எனது வரம்!
நாங்கள் இருவரும்
செந்தமிழ் போல்
பைந்தமிழ் போல்
பல்லாண்டு பல்லாண்டு
வாழ வாழ்த்துங்கள்!
(குறிப்பு : எங்கள் வாழ்வு வசப்பட்ட நாள் - 12/09/1980.)
எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!
No comments:
Post a Comment